Wednesday 14 November 2012

Aids and Appliances distribution to Differently Abled

 
We would like to share that we have organized an Event to distribute several welfare schemes on 10th November 2012. 
The program was presided by District Collector of Pudukkottai District. Program was conducted in the presence of MLAs from Alangudi, Viralimalai and Pudukkottai Constitutions. Some of the highlights of the program are listed below:
  • 92 VPRCs had received revised first installment (initially Rs. 2.4 lakhs was received by each VPRC). And 19 VPRC received their first installment. Totally 111 VPRCs received first installment.
  • 50 differently abled people with loco motor disability received Tricycles.
  • 35 differently abled people with MR/CP/Multiple Disability received Wheel Chairs.
  • 9 Visually Challenged Students received CD Players.
  • 90 MR/CP children received Teaching and Learning Materials. 
  • 24 participants received certificates for skill training from NDDB on Dairy Development.
  • Representatives from NIPMED has assisted to assess differently abled people to receive aids and appliances. 
  • More than 500 beneficiaries participated in the program.










Monday 3 September 2012

நாகபட்டினம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மக்கள் நிலை ஆய்வினை பார்வையிடல்


31.08.2012 அன்று  நாகபட்டினம் மாவட்டம்  மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. M. வடிவேலு அவர்கள் தங்களுடைய உதவி திட்ட அலுவலர்களுடனும்  நாகபட்டினம் மாவட்ட  புதுவாழ்வு திட்ட  மேலாளர் திரு. M. ஜெய் கணேஷ் அவர்களுடனும் கறம்பக்குடி களப்பகுதியில் உள்ள   முள்ளங்குறிச்சி ஊராட்சி சாந்தம்பட்டி குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வில் கலந்து கொண்டு மக்கள் நிலை ஆய்வின் நிலைகளான கிராம சமூக வரைபடம் வரைதல் மற்றும் பொருளாதார தரம் பிரித்தல் ஆகிய பணிகளை பார்வையிட்டனர். 
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. V  . திருவரங்கம் அவர்களும் தங்களுடைய உதவி திட்ட அலுவலர்களுடன் வந்திருந்து மக்கள் நிலை ஆய்வின் நிலைகளான கிராம சமூக வரைபடம் வரைதல் மற்றும் பொருளாதார தரம் பிரித்தல் ஆகிய பணிகளை பார்வையிட்டனர். 
புதுக்கோட்டை, புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் திருமதி. S. வசுமதி, உதவி திட்ட மேலாளர்கள்  திரு. இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்,   திரு. சிவ. ஜெகதீசன், கறம்பக்குடி களப்பகுதி அணித்தலைவர் (பொறுப்பு) திரு. என். சந்திரசேகரன் மற்றும் ஒருங்கிணைபாளர்கள் முன்னிலையில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர் மக்கள் நிலை ஆய்வு முறைகளை செயல் படுத்தி அனைவருக்கும்  விளக்கினர். 

மேலும், மக்கள் நிலை ஆய்வு முறைகளை முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு. தனவேந்தன் அவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் விபரங்களை அளித்து ஒத்துழைத்தனர்.
இறுதியில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
ஏற்கனேவே திருவாரூர் மாவட்டதில் இருந்து மகளிர் திட்ட அணி திருவாரூர் மாவட்ட புது வாழ்வு மாவட்ட திட்ட மேலாளருடன் வந்து புது கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை களப்பகுதியில் மக்கள் நிலை ஆய்வினை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.























Saturday 1 September 2012

திருவாரூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மக்கள் நிலை ஆய்வினை பார்வையிடல்

சமீபத்தில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் துவங்கப்பட்ட தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பணிகள் கிட்டத்தட்ட புது வாழ்வு திட்ட மாதிரிகளை ஒத்து இருப்பதால் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படும் மாவட்டத்தின் மகளிர் திட்ட அலுவலர்களை  புது வாழ்வு திட்டத்தின் திட்ட இயக்குனர் திருமதி. பெ. அமுதா இ.ஆ.ப. அவர்கள் புது வாழ்வு திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும் மாவட்டங்களை பார்வையிட பரிந்துரைத்தார். புது வாழ்வு திட்டத்தின் திட்ட இயக்குனர் பரிந்துரையின் பேரில்  கடந்த 25.08.2012 அன்று  திருவாரூர் மாவட்ட மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. த. ராம சந்திரன் அவர்கள் தங்களுடைய
உதவி திட்ட அலுவலர்களுடன் திருவாரூர் மாவட்ட  புதுவாழ்வு திட்ட  மேலாளர் திரு. ரா. சுபாஷ் நாத் மங்களம், அவர்களுடன் கந்தர்வகோட்டை களப்பகுதி  கந்தர்வகோட்டை ஊராட்சி மருத்துவர் குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வில் கலந்து கொண்டு மக்கள் நிலை ஆய்வின் நிலைகளான கிராம சமூக வரைபடம் மற்றும் பொருளாதார
தரம் பிரித்தலை பார்வையிட்டனர். 

புதுக்கோட்டை புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் திருமதி. S. வசுமதி, உதவி திட்ட மேலாளர் திரு. இ. ஆரோன்,   கந்தர்வகோட்டை களப்பகுதி அணித்தலைவர் திரு. இளவரசன்  மற்றும் ஒருங்கிணைபாளர்கள் முன்னிலையில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர்
மக்கள் நிலை ஆய்வு முறைகளை செயல் படுத்தி வந்திருந்தவர்களுக்கு விளக்கினர்.

மேலும் மக்கள் நிலை ஆய்வு முறைகளை கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கவிதா சிவா, துணை தலைவர் திரு. ராஜா, ஒன்றிய கவுன்சிலர் திரு. ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் திருமதி. பாமா சதாசிவம் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப  விபரங்களை அளித்து ஒத்துழைத்தனர்.

இறுதியில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.























 
 

Thursday 30 August 2012

அரசு நலத்திட்ட உதவிகள் தகவல் கையேடு

புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளின் சேவைகளை  பெறுவதற்கான தகுதிகள், இணைக்க வேண்டிய ஆவணங்கள் போன்ற விபரங்கள் அடங்கிய அரசு நலத்திட்ட உதவிகள்  தகவல் கையேட்டை காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.


 
http://www.scribd.com/doc/133085772/Convergence-Booklet-Pudukkottai-District
நன்றி!