அன்னவாசலில் 06.09.13 அன்று அரசு துறைகளுடன் புது வாழ்வு திட்டம் இணைந்து மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் நல திட்ட உதவிகள் மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும் புதுக்கோட்டை தனி துணை ஆட்சியர், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்ட அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், புது வாழ்வு திட்டத்தின் அணைத்து நிலை அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புது வாழ்வு திட்டம் மூலம் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் 125 நபர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார முன்னேற்றதிர்க்கான வட்டியில்லா தனி நபர் கடன் ரூ. 22,90,000 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும், 17 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 2,30,000 ஆதார நிதியும், 13
மாற்று திறனாளிகள் குழுவிற்கு ரூ. 1,60,000 மதிப்பிலான ஆதார நிதியும் வழங்கப்பட்டது.
மேலும் 43 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு கணினியும், கணினி கொள்முதலுக்கான நிதியாக ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கும் தலா ரூ. 60,000 வழங்கப்பட்டது.
முகாமில் 283 மாற்று திறனாளிகள் புதிதாக தேசிய அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர்.
புது வாழ்வு திட்டம் மூலம் மாற்று திறனாளிகள், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு விண்ணப்பம் அனுப்ப வழிநடத்தப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 208 மாற்று திறனாளிகள்உதவி உபகரணங்கள் பெற்றனர்(இதன் மதிப்பு ரூ. 9,05,038 ஆகும்). அதன் விபரம் பின்வருமாறு:
- பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றவர்கள் : 4
- மூன்று சக்கர வண்டி பெற்றவர்கள் : 50
- சக்கர நாற்காலி பெற்றவர்கள் :60
- காதொலி கருவி பெற்றவர்கள் : 20
- காலிப்பர் பெற்றவர்கள் : 10
- செயற்கை கால் பெற்றவர்கள் :2
- செயற்கை கை பெற்றவர்கள் :2
- கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் பெற்றவர்கள் : 40
- கைதாங்கி பெற்றவர்கள் : 20
வருவாய் துறை மூலம் மொத்தம்308 நபர்கள் மாதந்திர உதவித்தொகைக்கான ஆணையை பெற்றனர். இதன் ஒரு மாதத்திற்க்கான நலத்திட்டத்தின் மதிப்பு ரூ. 3,08,000 ஆகும்.
வேளாண்மை துறை மூலம் ரூ. 5,238 மதிப்பில் 7 நபர்களுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.