உலக சுற்று சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் தேதியன்று
அனுசரிக்கப்படுகின்றது. நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி ஒன்றிய
செயல்பாடுகளை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதில் ஒரு
நிகழ்ச்சியாக உலக சுற்று சூழல்தின விழிப்புணர்வு அளிக்கும் வகையில்
மரக்கன்றுகளை நடும் பணியினை துவக்கி வைத்தார். களபம் ஊராட்சி கிராம வறுமை
ஒழிப்பு சங்கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு தனிநபர் கடன்
மற்றும் இலக்கு மக்கள் சுய உதவி குழுக்களுக்கு ஆதார நிதி வழங்கியபின்
மரக்கன்றுகளை நாடும் பணியினை மேற்கொண்டார். உடன் புது வாழ்வு திட்ட
மேலாளர், உதவி திட்ட மேலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய
பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க
உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து
புதுவாழ்வு திட்டம் செயல்படும் பல பகுதிகளிலும் இந்த பணி
மேற்கொள்ளப்பட்டது.