Thursday 27 November 2014

தேசிய அளவிலான போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகளின் சாதனைகள்

தேசிய அளவிலான போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகளின்  சாதனைகள் 
நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 14 வது தேசிய நீச்சல் போட்டிகள் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட  புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகள் 5 பதக்கங்களை பெற்றனர். இதில் 3 தங்கமும் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலமும் அடங்கும். 
இதே போல் சண்டிகாரில் நவம்பர் மாதம்3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 4 வது தேசிய தொழில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளி திரு. ராஜேந்திரன் என்பவர் மரவேலைபாடு பிரிவில் வெண்கல பதக்கத்தை பெற்று மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தந்தார்.
வெற்றி பெற்ற அனைவரையும் புது வாழ்வு திட்டத்தின் திட்ட இயக்குனர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் பாராட்டினர்.