ஜூலை 21 ஆம் தேதி அன்று சென்னையில் மாற்று திறனாளிகளுக்கான மாநில
அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின்
சார்பில் புது வாழ்வு திட்டத்தின் மூலம் 20 மாற்று திறனாளிகள் அழைத்து
செல்லப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் 18 பதக்கங்களை
நமது புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகள் பெற்று புதுக்கோட்டை
மாவட்டத்தை மாநிலத்திலேயே இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தனர். முதல்
இடத்தை சென்னை பிடித்தது.
முன்னதாக இந்த 20 மாற்று
திறனாளிகளுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் உத்தரவின் பெயரில் மாவட்ட
விளையாட்டு துறை மூலம் ஒரு வார கால நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு பயிற்சின் போது தேவையான சிற்றுண்டிகளை மாவட்ட வர்த்தக சங்கத்
தலைவர் திரு. சீனு. சின்னப்பா வழங்கினார். ராஜா பர்னிச்சர் மார்ட்
உரிமையாளர் நீச்சல் உடைகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார். வெற்றி பெற்ற மாற்று திறனாளிகளை மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் அழைத்து வாழ்த்தினார்கள்.