இளைஞர் வேலை வாய்ப்பு பயிற்சி பிரசார ரதம் 3.2.14 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. செ. மனோகரன். இ.ஆ.ப. அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. உடன் புது வாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் திருமதி. செ. வசுமதி அவர்கள் மற்றும் உதவி திட்ட மேலாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.தகுதியுள்ள இலக்கு மக்கள் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும் இவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வாய்ப்புகளை தெரிய படுத்தவும் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களை அறிந்து கொள்ளவும் மேலும் வேலை வாய்ப்பை பெற்று தரவும் இது உதவும். இந்த ஊர்தியானது புது வாழ்வு திட்டம் செயல்படும் ஒன்றியங்களான கந்தர்வக்கோட்டை , குன்றாண்டார் கோயில், அன்னவாசல் மற்றும் கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் செல்லும்.
No comments:
Post a Comment